இந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கோரிக்கை

வாஷிங்டன்: கொரோனாவால் அமெரிக்க தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியா, சீனா தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவை, இந்த ஆண்டில் ரத்து செய்ய வேண்டும் என அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமெரிக்க தொழில்நுட்ப அமைப்பான யு.எஸ்.டெக் வொர்க்கர்ஸ் கடிதம் எழுதியுள்ளது.


அமெரிக்காவில் மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டினருக்கு எச்1பி, விசா, மற்றும் பிற சேவைகளுக்கு எச்.2பி விசா அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக 1,88,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,056 பேர் உயிரிழந்துள்ளனர். 7,251 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில். யு.எஸ்.டெக்.வொர்க்கர்ஸ் எனும் அமைப்பு, டரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: